Skip to main content

காளான் பண்ணை அமைப்பது எப்படி



வேலை தேடி களைத்து விட்டீர்களா ....
இதோ உங்களுக்கான நல்ல லாபம் தரும் சுய தொழில்...
காளான் வளர்ப்பு மூலம் நல்ல வருமானம் ஈட்டலாம் ... 
நன்கு கவனித்து செய்யுங்கள் 
பெண்களுக்கு உகந்தது
படம் உற்பத்தி முறை பற்றி :

திட்ட அறிக்கை :
( காளான் பண்ணை அமைக்க தேவையானது என்னென்ன ?)
1.தேவையான இடம் 10*10 ரூம் அல்லது குடில் [ சூரிய வெளிச்சம் நேரிடியாக உள்ளே படாமல் இருக்க வேண்டும் ]
2.காளான் விதை
3.பாலிதீன் பை
4.வைகோல் [ நெல்லம் புள் - காய்ந்தது ]


  • இந்த தொழில் ஒரு காய்கறி விவசாயம் போன்றது...
  • முதலீடு  எந்தப்பது  ரூ.1000 ரூபாயிலும் தொடங்கலாம்..
  • முதலீடு என்பது நாம் எத்தனை  படுக்கை செய்கின்றோமோ அதை பொறுத்து  மாறுபடும்..
  • ஒரு காளான் படுக்கை செய்ய தேவையான  செலவு ரூ.30 - ரூ.40


செய்முறை:

  • வைகோலை பதப்படுத்த இரண்டு முறை உள்ளது :

  • முதலில் வைக்கோலில் உள்ள கிருமிகளை சுத்தம் செய்ய வேண்டும் . அதற்கு இரண்டு முறை உள்ளது .

(கிருமிகளை அழிக்கும் முறை 1)

1)கொதி நீரில்  அவித்தல் முறை

(கிருமிகளை அழிக்கும் முறை 2)

2)ரசாயனம் (கெமிக்கல் ) பயன்படுத்தி பதப்படுத்தல் முறை .

1)கொதி நீரில்அவித்தல்முறை (இது சிறிய அளவில் காளான் உற்பத்திக்கு )

நன்கு காய்ந்த வைக்கோலைச் சிறு சிறு துண்டுகளாக வைக்கோல் (கட்டிங்) நறுக்கும் இயந்திரத்தின் மூலம் வெட்டிக் கொள்ள வேண்டும். பின்னர் சுமார் 8 மணி நேரம் ஊறவைத்து . இதனை ஒரு பத்து நிமிடம் நன்கு கொதிநீரில் வைத்து அவிக்க வேண்டும். இதன் மூலம் வைக்கோலில் உள்ள நோய் பரப்பும் கிருமிகள் அழிந்துவிடும் இது முதல் முறையாகும்.

2)ரசாயனம் (கெமிக்கல் ) பயன்படுத்தி பதப்படுத்தல் முறை . ( இது பெரிய  அளவில் காளான் உற்பத்திக்கு )

நன்கு காய்ந்த வைக்கோலைச் சிறு சிறு துண்டுகளாக வைக்கோல் (கட்டிங்) நறுக்கும் இயந்திரத்தின் மூலம் வெட்டிக் கொள்ள வேண்டும். பின்னர் சுமார் 8 மணி நேரம் ஊறவைத்து. அடுத்ததாக 100 லிட்டர் நீரும் 150 மில்லி லிட்டர் பார்மலினும், 3 கிராம் கார்பன்- டை- ஜம் பொடி  இம்மூன்றையும் கலந்த நீரில் வைக்கோலைச் சுமார் 8 மணி நேரம் ஊறவைக்கவேண்டும் .இதன் மூலம் வைக்கோலில் உள்ள நோய் பரப்பும் கிருமிகள் அழிந்துவிடும்,இது இரண்டாவது  முறையாகும்.

 மேலே குறிப்பிட்டுள்ள இரண்டு முறைகளில் ஏதோ  ஒரு  முறையை பயன்படுத்தி\, வைகோலில் உள்ள கிருமிகளை அழித்த  பிறகு .இதன் பின்னர் தண்ணீரை வடிகட்டி உலரவைக்கவும் . ஓரளவு ஈரப்பதம் (அதாவது 60%) கையில் பிடிக்கும் போது ஈர உணர்வு இருக்கும் படி வேண்டும். பின்பு 12-24 என்ற அளவுள்ள பாலித்தின் பையில் வைக்கோலை முதலில் 5 செ.மீ. அளவு இட்டு நிரப்ப வேண்டும். பின்பு காளான் விதையை 20 கிராம் எடுத்து நிரப்பப்பட்ட வைக்கோல் மேல் தூவ வேண்டும்.


இது போல் மாறி, மாறி 7 முதல் 8 அடுக்கு போட வேண்டும். பின்பு பக்கவாட்டில் 3 துளைகள் வீதம் நான்கு பக்கத்திலும் 12 துளைகள் போட வேண்டும். இதன் பின் காளான் வளர்ப்புக் கென்று தென்னை ஓலையால் பின்னப்பட்ட குடிலின் மையத்தில் கட்டித் தொங்க வைத்து தினமும் தண்ணீரைத் தரைப் பகுதியில் உள்ள மணலில் தெளிக்க வேண்டும். இவ்வாறு தெளித்து வந்த 10வது நாளில் காளான் விதைகள், வெள்ளை நிறமாக துளிர் விடுவதைக் காணலாம். பின்பு 27-ஆம் நாளில் காளான் மொட்டுக்கள் இதிலிருந்து தோன்றும். இதை 3 நாட்களில் அறுவடை செய்து விற்பனை செய்ய வேண்டும்.
பயிற்சி முக்கியமான ஒன்று நன்கு தொழில் ஈடுபட :-
கற்று தருபவை :-
1)காளான் விதை தூவுவது எப்படி ?

2)தண்ணீர் எவ்வாறு தெளிப்பது ?

3)காளான் படுக்கையில் நோய் தொற்று ஏற்படுவதன் அறிகுறிகள் ?

4)நோய் தொற்று ஏற்படாமல் தடுப்பது எவ்வாறு?
5)ஏற்பட்ட  நோய் தொற்றை பறவாமல் தடுப்பது எவ்வாறு?

6)நோய் தொற்றை கட்டுப்படுத்த  என்னென்ன மருந்துகள் உபயோகபடுத்துவது ?
7)மருந்துகள் மற்றும் கெமிக்கல்கள் எவ்வெளவு அளவு , எந்த நேரத்தில் பயன்படுத்துவது ?

8)உற்பத்தி செய்த காளானை மதிப்பு கூட்டி (காளான் பப்ஸ் ,காளான் பிரியாணி ,காளான் சூப் ,காளான் சில்லி ,காளான் பகோடா,காளான் பிரை ) விற்பனை செய்வது எப்படி ?


9)உற்பத்தி செய்த காளானை விற்பனை செய்யும் வழிமுறைகள் என்னென்ன ?
லாபம் :

1)***ஒரு காளான் படுக்கை(12*24 இன்ச் ) செய்ய தேவையான செலவு ரூ .40 [1.பாலிதீன் பை ,2.வைகோல் 3.காளான் விதை 4.வேலையாட்கள் கூலி உட்பட ].

2)***அந்த காளான் பையில் கிடைக்கும் காளான் அளவு 1.5 கிலோ முதல் 2 கிலோ வரை { இந்த காளான் மூன்று முதல் நான்கு அறுவடையில் கிடைக்கும் }

[ 28 ஆம் நாள் முதல் அறுவடை , அடுத்த 2 அல்லது 3 நாட்கள் இடைவெளியில் அடுத்த அடுத்த அறுவடை ]

காளான் விற்பனை: (விற்பனை வழிகள் கீழ் கொடுக்கப்பட்டுள்ளது )
  • 1 கிலோ காளான் உற்பத்திச் செலவு அதிகபட்சம் ரூ.30-40 ரூபாய் ஆகும்.
  • 1 கிலோ காளான் மொத்த விற்பனைக்கு ரூ.90 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யலாம்.                                                             
  • கடை கடை யாக நாம் விற்பனை செய்யும்போது ரூ.150 முதல் ரூ.175 வரை விற்பனை செய்யலாம்.
  • நேரடியாக நாமே விற்பனை நிலையம் அமைத்து செய்யும்போது ரூ.225 முதல் ரூ.250 வரை விற்பனை செய்யலாம்.
  • 1)உங்கள் ஊரில்/அருகில் உள்ள நகரத்தில் வசிக்கும் சமையல் மாஸ்டர்களை அணுகவும் , ஒருமாதத்தில் நான்கு அல்லது ஐந்து விஷேசங்களில் வெசிடபள் /காய்கறி பிரியானிக்கு பதில் காளான் பிரியாணியை சமைக்க வலியுறுத்த சொல்லலாம் . சமையல் மாஸ்டர்களுக்கு ஒரு சிறு தொகையை கமிசன் னாக குடுக்கலாம் . இதன் மூலம் வாரத்திற்கு 20 முதல் 30 கிலோவை சுலபமாக விற்கலாம் .


    2) விஷேச பத்திரிக்கை அச்சு அடிக்கும் இடத்தில் எளிதாக விஷேச வீட்டுகாரர்களின் மொபைல் எண்ணை ஒரு வாரம் முன்னதாகவே பெற்று அவர்களை நேரடியாக தொடர்பு கொண்டு ,மொத்த விலைக்கு காளான் விற்பனை செய்யலாம் .


    3)தற்போது மக்கள் பகிரியில் அதிகம் வெஜிடபள் பப்ஸ்-க்கும் பதில் காளான் பப்ஸ்-ஐ அதிகம் விரும்பி உண்ண தொடங்கி விட்டார்கள் , பாக்கிரிகளை அனுகி,மொத்த விலைக்கு காளான் விற்பனை செய்யலாம்.


    4)உங்கள் பக்கத்துக்கு டவுனில் பஸ்டாண்டில் தள்ளு வண்டியில் காளான் சமைத்து விற்பார்கள், அங்கும் மொத்த விலைக்கு காளான் விற்பனை செய்யலாம்.


    5)தற்போது பல இடங்களில் வெஜிடபள் சமோசா விற்பார்கள் , அங்கு காளான் சமோசாவை அறிமுகபடுத்தலாம் ,அங்கு மொத்த விலைக்கு காளான் விற்பனை செய்யலாம்.


    6)தற்போது பல இடங்களில் கோழி/ஆட்டுகால் சூப் விற்பனை செய்கின்றனர் , அங்கு காளான் சூப் அறிமுகபடுத்தலாம், அங்கு மொத்த விலைக்கு காளான் விற்பனை செய்யலாம்.


    7)உங்கள் ஊரில்/அருகில் உள்ள நகரத்தில் தினசரி மார்க்கெட் கண்டிப்பாக இருக்கும் அங்கு ஒரு ஆள் போட்டு சில்லரை விலையில் (Rs.45/Rs.50 )அல்லது கடைகாரரிடம் மொத்த விலையில்(Rs.35 / Rs.40) விற்பனை செய்யலாம்.


    8)ஏற்கனவே உள்ள சைவ /அசைவ ஹோட்டல்களில் காளான் பிரியாணியை அறிமுக படுத்தலாம் .

வெற்றிகரமான கணிதமே பூச்சியத்தில் தான் தொடங்குகிறது 
தங்களின் முயற்சி வெற்றி பெற உங்கள் நம்பன்  இன் வாழ்த்துக்கள் 
மேலும்  தந்தேகத்திற்குத்  அணுகவும் :-

[1]காளான் விதைகள் சாம்பிள் 1 கிலோ , [2] CD/ புத்தகம் , [3] 5 காளான் படுக்கை பாலிதீன் கவர்கள் வீட்டில் இருந்ததே போஸ்ட்மேனிடம் பணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் விலை ரூ.200. தேவைக்கு , உங்கள் முகவரியை மெசேஜ் /SMS / what's app அனுப்பவும் ---> 9566354046. *** பண்ணையில் நேரடி பயிற்சி அளிக்கின்றோம் , பண்ணை அமைத்துள்ள இடங்கள் ஈரோடு ,தர்மபுரி,விழுப்புரம் மற்றும் மேட்டூர்.***

Comments

Post a Comment

Popular posts from this blog

சணல் பைகள் தயாரிப்பு | Jute Bag Making In Tamilnadu

வேலை தேடி களைத்து விட்டீர்களா .... இதோ உங்களுக்கான நல்ல லாபம் தரும் சுய தொழில்... சணல் பைகள் தயாரிப்பு | Jute Bag Making In Tamilnadu பி ளாஸ்டிக் பைகள் பயன்படுத்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பெரிய அளவில் எதிர்ப்புக் கிளப்பியிருப்பதை அடுத்து, சணல் பைகளுக்கு மதிப்பு கூடியிருக்கிறது. துணிப்பைகள் அளவுக்கு விலை அதிகமாக இல்லாமலும் அதே அளவுக்கு உழைக்கும் தன்மையோடும் இருப்பது சணல் பைகளின் ப்ளஸ் பாயின்ட்! இத்தனை வரவேற்பு இருக்கும்போது அந்தத் தொழிலில் இறங்கிவிடுவது நல்ல முடிவாகத்தானே இருக்கமுடியும். முதலீடு:- இதற்கு முதலீடு என்று பார்த்தால் பெரிய அளவில் ஏதுமில்லை. ஐந்தாயிரம் ரூபாய்க்கு தையல் இயந்திரமும், பத்துக்கு பத்து இடமும் இருந்தால் போதும். மற்றபடி பைகள் தயாரிப்பதற்கான நூல், கைப்பிடி போன்றவை பெரிதாக செலவு வைக்கக்கூடிய விஷயங்கள் இல்லை. மூலப்பொருல் :- இந்த சணல் பைகள் தயாரிப்பதற்கான மூலப்பொருளான சணல் ஷீட்கள் பல சைஸ்களில் கிடைக்கின்றன. இந்த ஷீட்கள் தயாராவது மேற்கு வங்காளத்தில்தான் என்றாலும் இதன் டீலர்கள் தமிழ்நாடு அளவில் பரவலாக இருக்கிறார்கள். ஒரு மீட்டர் ஷீட் 30 ரூபாய் முத...

ஊதுபத்தி செய்வது எப்படி?

வேலை தேடி களைத்து விட்டீர்களா .... இதோ உங்களுக்கான நல்ல லாபம் தரும் சுய தொழில்... ஊதுபத்தி செய்வது எப்படி தேவையானவை :- ஊதுபத்தி உற்பத்தி செய்யும் இயந்திரம் மூன்று வகைகளில் உள்ளது   :- * SINGLE PEDAL MANUAL = RS  13,000 ONLY . * DOUBLE PEDAL MODEL MANUAL =  RS 15,500 ONLY. * SEMI AUTOMATIC MODEL =  RS 65,000 ONLY. * FULLY AUTOMATIC = RS 75,000 ONLY. முதலீடு :- 1 லட்சம் போதுமானது SINGLE PHASE CURRENT   --------  வீட்டு கரண்ட் போதுமானது அகர்பத்தி உற்பத்தி செய்ய உரிய பயிற்சி முக்கியம் தேவையானது  லாபம் :- நல்ல லாபம் ஈட்டலாம்  மாதம் 30,000-/- நிகர லாபம் ஆகும்  * PRODUCTION CAPACITY OF 8000 TO 30000 STICKS PER SHIFT, * RAW AGARBATTI FROM 3MM TO 6 MM THICKNESS AND LENGTH 6 INCH TO 14 INCH * MASALA AGARBATTI CAN ALL SO BE MADE BY THIS MACHINE, * ROUND AND SQUARE (POLISHED EVEN STICK LESS THAN 2MM DIA )STICKS CAN BE USED * HARDENED STRUCTURE WITH SS ROCKET AND NOZZLE.. வேலையாட்கள் :- சிங்...

சுயதொழில் – மெழுகுவர்த்தி தயாரிப்பது எப்ப‍டி?

வேலை தேடி களைத்து விட்டீர்களா .... இதோ உங்களுக்கான நல்ல லாபம் தரும் சுய தொழில்... சுயதொழில் –  மெழுகுவர்த்தி தயாரிப்பது எப்ப‍டி? வேண்டியபொருட்கள்:- 1.வேக்ஸ்(wax) 2.க்ரையான்ஸ் 3.தேங்காய்  4.எண்ணெய் 5.திரிநூல் 6.ப்ளாஸ்டிக்  7.மோல்டிங்  எசன்ஸ் – ஜாஸ்மின், தாழம்பூ இதில், வேலைப்பளு குறைவு. குறைந்த முதலீடு, இட வசதி போதுமானது. ஒருவர் மட்டும் உழைத்தாலே போதும். வீட்டிலேயே இதை நல்ல முறையில் நடத்த முடியும். தினமும் குறைந்தது 5 கிலோ, அதிகபட்சம் 25 கிலோ மெழுகுவர்த்தி தயாரிக்க முடியும். இதற்கு ஹேண்ட் மெஷின், செமிஆட்டோமெடிக் என்ற இரு வகை மெஷின்கள் உள்ளது. ஹேண்ட் மெஷின் ரூ.500 முதல் விற்பனை செய்யப்படுகிறது. செமி ஆட்டோமெடிக் மெஷின் வாங்க ரூ.30 ஆயிரம் வரை செலவாகிறது. செமி ஆட்டோமெடிக் மூலம் நாள் ஒன்றுக்கு 75 கிலோ வரை உற்பத்தி செய்ய முடியும். தொழில் தொடங்க, வங்கிகளில் எளிதாக கடன் பெற முடியும். பிரதமர் சுயவேலைவாய்ப்பு திட்டம், கதர் கிராம தொழில் வாரியம், மாவட்ட தொழில் மையம், தாட்கோ போன்றவற்றில் 35 சதவீத மானியத்தில் வங்கி கடன் எளிதாக பெற முடியும். கிராமமாக இருப்பி...